721187541parliamnet5
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய பேரவைக்கு 32 அங்கத்தவர்கள்!

Share

தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான ‘தேசிய பேரவை’ எனப்படும் நாடாளுமன்றக்குழுவுக்கு 32 உறுப்பினர்கள் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.  எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட நான்கு கட்சிகள் அதில் அங்கம் வகிக்கவில்லை.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போதே தேசிய பேரவையில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர் விவரத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , சபைக்கு அறிவித்தார்.

சபாநாயகர் தலைமையிலான தேசிய பேரவையில்,  பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,  சபை முதல்வர், ஆளுங்கட்சி பிரதம கொறடா ஆகியோர் பதவி நிலை உறுப்பினர்களாவர்.

ஏனைய உறுப்பினர்கள் கட்சிகளின் அடிப்படையில் தெரிவாவார்கள்.

அந்தவகையில்,

டக்ளஸ் தேவானந்தா,
நஸீர் அஹமட்,
டிரான் அலஸ்,
சிசிர ஜெயகொடி,
சிவநேசத்துரை சந்திரகாந்தன்,
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,
ரவூப் ஹக்கீம்,
பவித்ரா வன்னியாராச்சி,
வஜிர அபேவர்த்தன,
ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ்,
திஸ்ஸ விதாரன,
ரிசாத் பதியுதீன்,
விமல் வீரவன்ச,
வாசுதேவ நாணயக்கார,
பழனி திகாம்பரம்,
மனோ கணேசன்,
உதய கம்மன்பில,
ரோஹித்த அபேகுணவர்த்தன,
நாமல் ராஜபக்ச,
ஜீவன் தொண்டமான்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
அத்துரலியே ரத்தன தேரர்,
அசங்க நவரட்ன,
அலி சப்ரி ரஹீம்,
சி.வி விக்னேஸ்வரன்,
வீரசுமன வீரசிங்க,
சாகர காரியவசம்,

ஆகியோர் நேற்று பெயரிடப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  டலஸ் ஆதரவு அணிகள் தேசிய சபைக்கு தமது உறுப்பினர்களை பெயரிடவில்லை.  தேசிய சபைக்கு 35 உறுப்பினர்களை விஞ்ஞாத வகையில் நியமனம் இடம்பெறலாம்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...