Samara Sampath Dasanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சர் சாமர மீது தாக்குதல்!

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட , இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை பதுளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சகிதம் பதுளையில் வர்த்தக நிலையமொன்றுக்கு நேற்று சென்று பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.

இதன்போது அங்கு வந்த இருவர், இராஜாங்க அமைச்சரை திட்டி, அவருக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், ஹெல்மட் ஒன்றினால் இராஜாங்க அமைச்சர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக செயல்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பதுளை பொலிஸாருக்கு அறிவித்து தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இருவரைக் கைது செய்தனர்.

அவ்வேளையில் அவர்களில் ஒருவர் கீழே விழுந்ததினால், பலத்த காயங்களுடன் பதுளை அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இராஜாங்க அமைச்சருக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்படாததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல், தமது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சகிதம் வீடு திரும்பினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...