Dinesh Gunawardena
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜெனிவா ஊடாக எம்மை முடக்க முடியாது!

Share

” தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்கூட விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு எதிரான சக்திகளே ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றன. ஜெனிவா ஊடாக எம்மை முடக்கும் முயற்சி கைகூடாது.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த ஆட்சியை கொண்டுசெல்ல முடியாது என கூறியவர்கள்தான், பொருளாதார விவகாரம் தொடர்பிலும் ஜெனிவாவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள்கூட முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். எமது அரசாங்கம் ஜனநாயக ஆட்சி முறைமை பின்பற்றுகின்றது. அந்தவகையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியை – சவாலை எதிர்கொண்டுள்ளோம். இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை சர்வதேசம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதக பதில் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவும். எனவே, ஜெனிவா ஊடாக எம்மை முடக்கலாம் என்ற முயற்சி கைகூடாது. ” – எனவும் பிரதமர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...