vinothen 720x375 1
செய்திகள்இலங்கை

மன்னாரில் 21 பேருக்கு தொற்று – வயோதிபர் பலி!

Share

மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மன்னார் முருங்கன் செட்டியார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த 67 வயது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...