jaffna 720x375 2
செய்திகள்இலங்கை

யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.!

Share

யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிக்க துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து 3 பேர் பல்கலைக்கழக நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கொரோனா பி.சி.ஆர். ஆய்வுகூடத்தில் பணியாற்றிய 4 மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றதால்
பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக பல்கலைக்கழக நிதியில் இருந்து தற்காலிகமாக தேவையான ஆளணியை உள்வாங்க துணைவேந்தர் பணித்திருந்தார்.

இதற்கமைவாக நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே விரைவாக பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...