301993495 939661550320013 1130064584475080176 n
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்!

Share

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மேற் கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கும் அதன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கும் அமைவாகவே விசாரிக்கப்பட வேண்டும் இதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் மாறாக குற்றம் இழைத்த தரப்பான இலங்கையை உள்ளக விசாரணையில் விசாரித்தல் என்பது பாதிக்கப்பட்ட தரப்பை ஏமாற்றும் செயல் ஆகும்.

சர்வதேச நியமங்களுக்கு அமைவான குற்றங்களை அதற்கான சட்டங்கள் இல்லாத நீதித்துறைக் கொண்ட இலங்கையின் நீதித் துறையில் விசாரித்தல் என்பது நீதியானது அல்ல அத்துடன் குற்றம் இழைத்த தரப்பே தாங்களை தாங்கள் விசாரித்தல் உலக ஒழுங்கில் மிகவும் வேடிக்கையான விடயம்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கவும் மீள் நிகழாமையை உறுதி செய்யவும் பரிகார நீதியை பாதிக்கப்பட்ட இனம் பெற்றுக் கொள்ளவும் மிகப் பொருத்தமான பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணைப் பொறிமுறையே ஏற்புடையது.

ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பைச் சார்ந்த தாயக புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்ற கோரிக்கையை மனிதவுரிமைப் பேரவையில் அங்கம் பெறும் கோ குறூப் நாடுகளின் பிரதி நிதிகளிடமும் அதனை வழி நடத்தும் நாடுகளிடமும் முன் வைத்து ஒரே நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் .

உள்ளக நீதி விசாரணை என்பதை பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் தொடர்ந்து தமிழர் தரப்பு உறுதி செய்ய வேண்டும் இத காலத்தின் கட்டாயம் அதுவே சர்வதேச நீதிக்கான கதவுகளைத் திறக்கும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...