Pathum Nissanka
செய்திகள்விளையாட்டு

ICC தரவரிசையில் 8 ஆவது இடத்தில் பத்தும் நிஸ்ஸங்க

Share

ஆசிய கிண்ணத் தொடரில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி தரவரிசையில் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நிசங்க ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக 52 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணத் தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் விக்கெட் காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ரிஸ்வான், சக வீரர் பாபர் அசாமை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ரிஸ்வான் ஆசிய கிண்ணத்தில் முதல் மூன்று போட்டிகளிலும் 192 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர் வரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். எனினும் ஆசிய கிண்ணத்தில் சோபிக்கத் தவறிவரும் வனிந்து ஹசரங்க 3 இடங்கள் பின்தங்கி 9ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார்.

டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...

images 4 2
செய்திகள்உலகம்

எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி;அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில்...

da00bfe0 1dd0 11ef 95bd a16a3f175cc2.jpg
செய்திகள்இலங்கை

பெங்களூரில் இணையவழிப் பாலியல் மிரட்டல்: இலங்கை மாணவரிடம் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் கும்பல்!

பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால்...

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
செய்திகள்அரசியல்இலங்கை

வாழைச்சேனை சம்பவங்கள் பௌத்த-சிங்கள சமூகத்தைத் தூண்டும் சதி: ஞானசார தேரர் எச்சரிக்கை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள்...