Ranil
இலங்கைசெய்திகள்

நல்லூர் கந்தனை பிரார்த்திப்போம் – வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

Share

இலங்கையில் சித்தர்கள் வாழ்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமியில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நடந்துவரும் இத்தருணத்தில், நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகொண்டு, அனைவருக்கும் நலம்நல்க நல்லூர் கந்தனைப் பிரார்த்திப்போம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல வரலாற்றுச் சிறப்புக்களையும் மகிமைகளையும் கொண்ட கந்தசுவாமி கோயில் திருவிழா தற்போது வெகுவிமர்சையாக நடந்துவருகிறது. இம்முறை 25.08.2022 வியாழக்கிழமை அன்று கந்தப்பெருமான் தேரில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா விசேஷமானது. இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் இன, மத பேதங்களைக் கடந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் இதன்போது ஒன்றுகூடுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

இந்துக்களோடு சிங்கள பௌத்த மக்களும் ஏனைய சமயத்தவர்களும் தவறாது வழிபட்டு ஆசிபெறும் நல்லூர் கந்தனின் சிறப்பானது, இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான உறவு வலுப்பெற உதவுகிறது.

‘நாட்டின் நெருக்கடிகளை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைந்து கடினமாக உழைக்க வேண்டிய தருணம் இது. இந்தத் தருணத்தில் இலங்கையில் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் விலகி, சுபீட்சமான வாழ்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கள் அனைவருக்கும் நலம் நல்க நல்லூர் கந்தனை அனைவருமாக ஒன்றுகூடி பிரார்த்திப்போம்’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...