Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபயவுக்கு முழு சுதந்திரம் உண்டு!

Share

” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கை வருவதற்கான முழு சுதந்திரம், உரிமை உள்ளது. அந்தவகையில் அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டுக்கு வரும் உரிமை கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கின்றது.

அதேவேளை, போராட்டம் என்ற போர்வையில் இடம் பெற்ற சில வன்முறைச்சம்பவங்களை அனுமதிக்க முடியாது. அத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்.

அதேபோல ஊழல்கள் மற்றும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர்களை ஊடகங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவ்வாறு அல்லாமல் அரசியல்வாதி, அரச அதிகாரி என பொதுவாக விளித்தால் அது அனைவருக்கும் களங்கமாக அமையும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...