VideoCapture 20220817 100634
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையில் சீனக் கப்பல்! – தமிழக எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

Share

இலங்கை வந்துள்ள சீனாவின் சர்ச்சைக்குரிய உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நன்குறமிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழக கரையோர பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 விமானங்களும் நேற்று காலை முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் உள்ளிட்ட 8 கப்பல்கள் இடைவிடாத கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

VideoCapture 20220817 100630

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...