299767692 745579783606552 5732114248611863466 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் மாவட்ட பாரவூர்திகளுக்கு டீசல் விநியோகிக்க நடவடிக்கை!

Share

யாழ் மாவட்டத்துக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துவரும் பாரவூர்திகளுக்கு தேவையான எரிபொருட்களை யாழ்ப்பாணம் MPCS நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கான மீளாய்வு கூட்டத்தில் யாழ் வணிகர் கழகத்தினர் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அத்தியாவசிய பொருட்களை எடுத்துவரும் நடவடிக்கைக்காக குறைந்தபட்சம் 20 பாரவூர்திகள் வாராந்தம் செயற்பட வேண்டியுள்ளதாக யாழ். வணிகர் கழகத்தினர் தெரிவித்துள்ள நிலையில், அந்த வாகனங்களுக்காக வாராந்தம் 18,000 லிட்டர் டீசல் வழங்க, வர்த்தக அமைச்சு பரிந்துரைந்துள்ளது.
இதனையடுத்து அவற்றை யாழ்ப்பாணம் MPCS நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 28.08.2022 க்கு பின்னதாக பாரவூர்திகள், கடலுணவு வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக QR Code வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...