Gottabhayarajapaksha
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்கு விசா! – இலங்கை அரசே கோரிக்கை என்கிறது தாய்லாந்து

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee Sangrat தனது ருவிட்டர் பதிவில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதுவரை எவ்வித அரசியல் அடைக்கலம் கோரிவில்லை. இது தொடர்பில் இலங்கை அரசே கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு இந்த கோரிக்கை குறித்து ஆராய்வதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர உரிமம் இருப்பதால் கோட்டாபய ராஜபக்ச விசாவுடன் 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும். 2013ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்படவுள்ளது – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து நோக்கி செல்லவுள்ளார் என ரொய்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...