20220102 111815 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர்!! – சிறிதரன் எம்.பி

Share

நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர் சாரம் கட்டிய சண்டியன்போல் செயற்பட்டு வருகின்றார் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சிறிதரன் எம்.பி., வடக்கு ஆளுநர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.

” ஜீவன் தியாகராஜா என பெயர் இருந்தாலும் வடக்கு ஆளுநருக்கு தமிழ் தெரியாது. அவர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். அதிகாரிகளை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்து, காட்டு தர்பார் நடத்துகின்றார்.

திட்டமிட்ட அடிப்படையில்தான் அவர் தமிழர் பகுதிக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிழக்கு ஆளுநரும் அப்படிதான். இவர்களிடம் முறையிட்டு பயன் இல்லை. ” – எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...