புதிய கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக, நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் தொற்றாநோய் நிபுணர்களின் பங்குபற்றலுடன் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
புதிய கொவிட் தாக்கத்தை தடுக்க, முகக்கவசங்களை மீண்டும் கட்டாயமாக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார வல்லுநர்கள் சங்கம் ஆகியவை சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment