United Nations
உலகம்செய்திகள்

8 பில்லியனை தொடும் உலக மக்கள் தொகை!!

Share

உலக மக்கள்தொகை இவ்வாண்டு நவம்பர் 15ஆம் திகதி எட்டு பில்லியனை தொடும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் சீனாவை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்று உலக நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

உலக மக்கள் தொகையில் இது ஒரு புதிய மைல்கல் என்று தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறினார்.

பூமியைக் காப்பதில் அனைவருக்கும் பொறுப்பு இருப்பதை நினைக்க வேண்டிய நேரம் இது. ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருப்பதில் எங்கே தவறு நடக்கிறது என்பதையும் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

8 பில்லியனை நோக்கி விரைந்து நடைபோடும் மனித குலம் எண்ணிப் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய தருணங்களை அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவ முன்னேற்றம், நீண்ட ஆயுள், பிரசவத்தில் ஏற்படும் தாய்சேய் மரணங்கள் வெகுவாய்க் குறைந்திருப்பது ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் வெவ்வேறானவர் என்பதைக் கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் உலக நிறுவனத் தலைமைச் செயலாளர்.

1950 தொடக்கம் உலக மக்கள்தொகை வளர்ச்சி அதன் மெதுவான வேகத்தை காண்பிப்பதாக ஐ.நா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை 2030இல் 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும் 2080களில் அதன் உச்சமாக 10.4 பில்லியனாகவும் இருக்கும் என்றும் அதன் பின்னர் 2100 வரை அந்த நிலை நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...

25 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விமானச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க விசேட நடவடிக்கை: பிரதி அமைச்சர் தலைமையில் முக்கியக் கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சிவில் விமானச் சேவைகளைத் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

24 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல்: இந்திய நிறுவனத்திற்கு அனுமதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில், அவசரகால அடிப்படையில் 05...

23 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தென் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை: 250 கிலோ கொக்கைனுடன் 6 பேர் கைது!

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தென் கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட...