25 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விமானச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க விசேட நடவடிக்கை: பிரதி அமைச்சர் தலைமையில் முக்கியக் கலந்துரையாடல்

Share

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சிவில் விமானச் சேவைகளைத் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (17) நடைபெற்றது. துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் ஜனக ருவன் கொடித்துவக்கு தலைமையில், சிவில் விமானச் சேவைகள் அதிகார சபையின் வளாகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, தற்போது கையிருப்பில் உள்ள விமான எரிபொருள் (Jet A-1) அளவு மற்றும் அதன் முகாமைத்துவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகச் சங்கிலிப் பாதிப்புகள் இலங்கையின் வான்வழிப் போக்குவரத்தைப் பாதிக்காத வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு விமானச் சேவைகளின் ஸ்திரத்தன்மை மிக முக்கியமானது என்பதால், எரிபொருள் இருப்பைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் மேலதிக விநியோகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. விமான நிறுவனங்களுக்குத் தேவையான எரிபொருளைத் தட்டுப்பாடின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பிரதி அமைச்சர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களைக் கருத்திற் கொண்டு, விமான எரிபொருள் முகாமைத்துவத்தில் புதிய பொறிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், அவசர காலச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான முன்னாயத்தங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...