Train 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான தொடருந்து சேவை நாளை ஆரம்பம்!

Share

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ்.ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இந்த சேவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையே குறுகிய தூர தொடருந்து சேவை நாளை ஆரம்பிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை 6.40 மணியளவில் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு இடம்பெறும்.

காங்கேசன்துறை – முறிகண்டி இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு பயணிகள் சேவையில் யாழ்.ராணி தொடருந்து இயக்கப்படும். தினமும் இரண்டு சேவைகள் இடம்பெறும்.

காங்கேசன்துறையிலிருந்து முறிகண்டி நோக்கி காலை 6 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், கிளிநொச்சியிலிருந்து காங்கேசன்துறை நோக்கி முற்பகல் 10 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படும்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக மூன்றாம் வகுப்புக்குரிய 90 ரூபாவும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாவும் அறவிடப்படும்

இந்த தொடருந்து சேவை முதன்மை நகர ரயில் நிலையஙகளில் சேவையை ஆரம்பிக்கும் நேர அட்டவணை வருமாறு

292965266 717237359774128 952678742544400865 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...