அரசியல்இலங்கைசெய்திகள்

19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள்!

Wijeyadasa Rajapakshe
Share

அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

19 ஐ அடியொட்டியதாக 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்டாலும், அது அவ்வாறு அமையவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் மஹாவலி என மூன்று அமைச்சுகளை ஜனாதிபதி வகிக்க ஏற்பாடு இருந்தது. ஆனால் 22 இல் பாதுகாப்பு அமைச்சு பதவியை மட்டுமே ஜனாதிபதி வகிக்க முடியும். அதையும் நீக்குவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும்.” – எனவும் நீதி அமைச்சர் விளக்கமளித்தார்.

மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தைக்கூட, அரசியலமைப்பு பேரவையே வழங்க வேண்டும், அமைச்சர் நீக்கப்பட்டாலும், அமைச்சின் செயலாளர் தொடர்ந்தும் செயற்படலாம், இப்படி பல சிறப்பான ஏற்பாடுகள் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

எனினும், மகாநாயக்க தேரர்களைக்கூட ஏமாற்றும் வகையிலேயே 22 முன்வைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...