“எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்படையினருக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடமுடியாதுள்ளது . இந்நிலையில் வடக்கு கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமிக்கின்றனர். எனவே, எமது கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், எரிபொருள் பிரச்சினையால் கடற்றொழிலாளர்களுக்கு தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
#SriLankaNews
Leave a comment