download 5 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தக்காடு முகாமுக்கு விரைகிறது மனித உரிமை ஆணைக்குழு!

Share

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவொன்று, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இன்று (01) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

குறித்த முகாமில் ஏற்பட்ட நிலைவரம் தொடர்பில் அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்கும், உண்மையை கண்டறியும் நோக்கிலுமே குறித்த குழுவின் விஜயம் அமையுவுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் கைதிகளில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் ஆரம்பமானது. தப்பிச்சென்றவர்களில் 653 பேர் சரணமடைந்துள்ளனர். எஞ்சிய 70 பேரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்கின்றது.

புனர்வாழ்வு மையத்தில் கொழும்பு, மோதரை பகுதியை சேர்ந்த இளைஞர், அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என சக கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது உரிமைகள் மீறப்படுவதாகவும், அடக்கி ஆளப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...