download 3
இலங்கைசெய்திகள்

எரிபொருள் நெருக்கடி – ரஷ்யாவிடம் சரணடைகிறது இலங்கை

Share

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன – என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” இராஜதந்திர நடவடிக்கையின் நிமித்தம் இரு அமைச்சர்கள் நாளை (27) ரஷ்யா செல்கின்றனர். இதன்போது எரிபொருள் விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் நாளை முதல் டோக்கன் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், படையினர் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் காஞ்சன தெரிவித்தார்.

எனவே, வரிசைகளில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...