IMG 20220621 WA0055
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். முதல்வர் – கனடிய தூதரகம் சந்திப்பு

Share

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் மற்றும் ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் வழங்கி பரிமாறப்பட்டன.

இதன்போது மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கனடிய தூதுவர் தன்னுடன் உரையாடிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

குறிப்பாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை யாழ்ப்பாண மாநகரத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நாடு இவ்வாறான நிலைமைக்கு போனதற்கான காரணங்கள் தொடர்பில் கேட்டறிந்தாக குறிப்பிட்டார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் நாட்டின் அபிவிருத்திக்கும் மாநகரத்தின் அபிவிருத்திக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான விடயங்கள் தொடர்பிலும் தான் கனடிய தூதுவருக்கு தெரிவித்ததாக ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

IMG 20220621 WA0057 IMG 20220621 WA0051

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....