மின்சாரம் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா உம்மா என்பவரே இன்று காலை 5.30 மணியளவில் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த தகரக் கொட்டிலுக்கு மேலாகச் சென்ற மின்சார இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
மரணமடைந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment