நீரில் மூழ்கிய
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விகாரைக்கு வழிபாடு செய்ய வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Share

பலாங்கொடை – கூரகலை விகாரைக்கு வழிபாடு செய்ய வந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தூவிலிஎல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றபோது அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் மாத்தறை – மாய்ம்மன பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்திமால் புத்திக என்பவராவார்.

இவரோடு விகாரைக்குப் பயணித்த குழுவினர் இவ்விடயம் தொடர்பில் கல்தோட்டைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இளைஞரின் சடலத்தை மீட்டுள்ள கல்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தூவிலஎல்ல மற்றும் இப்பகுதி நீர்நிலைகளில் இத்தினங்களில் நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் மிக அவதானமாக நீராடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...