CEB
இலங்கைசெய்திகள்

இலங்கை மின்சார சபைக்கு கோப் குழு அழைப்பு!

Share

இலங்கை மின்சார சபை எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 07 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபை, 08 ஆம் திகதி மொறட்டுவைப் பல்கலைக்கழகம் என்பனவும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன. கோப் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது.

அதேபோன்று, அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் சில கூட்டங்களும் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 07 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சு, 08 ஆம் திகதி இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்படுத் திணைக்களம், 09 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு என்பன கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், சதொச நிறுவனம், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம், இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் அதிகாரிகளின் பங்குபற்றலில் நடைபெறவுள்ளது.

கோபா குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூடவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...

anura kumara
இலங்கை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த...

ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

  நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும்...

Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...