கடல் அட்டைகளுடன்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த 3 கோடி ரூபா பெறுமதியான கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது!

Share

இலங்கைக்குக் கடத்த இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளுடன் ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதப்படுத்தப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது, பட்டணம் காத்தான் புறவழிச் சாலைப் பகுதியில் கேணிக்கரைப் பொலிஸார் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர்களில் ஒருவர் தப்பியோடினார்.

மற்றைய நபர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது இலங்கைக்குப் படகு மூலம் கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தமை தெரியவந்தது.

அவரிடம் இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

#SriLanka&IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...