Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

வாக்கெடுப்பின்றி 21 நிறைவேற்றப்படும்!

Share

“தற்போதைய சூழ்நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி   முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நேரிடும். எனவே, அதற்கு வழிவகுக்காத   வகையிலேயே 21 நிறைவேற்றப்படும்.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார் .

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உட்பட அநுநாயக்க தேரர்களை சந்தித்து, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போது மொட்டு கட்சி வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி குறித்த ஐயப்பாடு உள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும். எனவே, 21 ஐ ஆரம்ப புள்ளியாக கருதலாம்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தடை விதிக்கப்படும். இது தொடர்பில் அழுத்தங்கள் வருகின்றன. எனினும், கொள்கை ரீதியில் எடுக்கப்பட முடிவு மாறாது. அந்த நபர்தான் பொருளாதாரத்தை சீரழித்தார். தனது சகோதரராக இருந்தால்கூட அவரை அமைச்சு பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கினார்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...