நாட்டில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் ஆயிரத்து 708 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களில் 751 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹாலர் தல்துவ தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment