colombo 1 e1652962832517
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பல்கலை மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

Share

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் கோட்டையில் உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

‘கோட்டா – ரணில் சூழ்ச்சி அரசை விரட்டியடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து காலிமுகத்திடல் நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது.

இவர்கள் மருதானை, புறக்கோட்டை ஊடாக உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் ஊடாக காலிமுகத்திடல் பக்கம் செல்ல முயன்றனர்.

இதன்போது அங்கு வீதித் தடைகளை போட்டிருந்த பொலிஸார், மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தி மாணவர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர்.

எனினும், தொடர்ந்தும் மாணவர்கள் அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...