4fc98fb7 foreign employment
செய்திகள்இலங்கை

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!!

Share

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லவுள்ளோர் விரைவாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பதிவுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணப்படும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து , அதனைபதிவேற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படுவோருக்கு கட்டாயம் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

இதேவேளை, குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரமே பணியாளர்கள் ஏற்றியிருக்க வேண்டும் என எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

அதற்கமைய பைஸர், அஸ்ராஜெனகா, மொடனா மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை வௌிநாடுகள் அங்கீகரித்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...