photo 9
அரசியல்இலங்கைசெய்திகள்

தப்பியோடிய 26 கைதிகளை சரணடையுமாறு அறிவுறுத்தல்!

Share

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் காணாமல்போயுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

தப்பியோடிய கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதன் பிரகாரம், கைதிகள் 0114 677 177 அல்லது 0114 677 517 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது, ​​வட்டரெக்க சிறைச்சாலையில் இருந்த 181 கைதிகள் வேலைத்திட்டமொன்றுக்காக விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும்போது, ​​அவர்கள் பயணித்த பஸ் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது எனவும், இதன்போது 58 கைதிகள் தப்பிச் சென்றனர் எனவும், அவர்களில் 32 பேர் இதுவரை சரணடைந்துள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...