Ali Sabry 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நெருக்கடியை அரசால் மட்டும் தீர்க்க முடியாது! – கூறுகிறார் அலி சப்ரி

Share

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசால் மட்டும் தனித்து தீர்வை தேட முடியாது. எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.” – என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுகள் சாதகமாக நிறைவடைந்துள்ளன. நாம் எவற்றையும் மறைக்கவில்லை. பேசப்பட்ட விடயங்கள் எம்.பிக்களுக்கு வழங்கப்படும்.

தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்க்க எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம் .

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் சிறப்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறந்த ஒருவர் வந்தால், நான் எனது பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார். அனைவரும் ஒன்றிணைந்து தீர்வை தேட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் லெபனானின் நிலைமையே இங்கு ஏற்படும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...