புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்
செய்திகள்இலங்கை

புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

Share

புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினால் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும், எனவே புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியம் என புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் சச்சினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படும், மீண்டும் ஒரு நோய் ஏற்படும்போது அதனை எதிர்த்து போராடுவது கடினமாக காணப்படும். எனவே இவர்கள் தமக்குரிய மருந்துகளை தொடர்ச்சியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு வெளியிடங்களுக்கு செல்லாமல் அதே பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் எனில் பிரதேசத்திலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் பதிவுசெய்து நடமாடும் சேவையினூடாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...