DSC09220
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு! – போராட்டத்தில் குதித்த மக்கள்

Share

சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான நிலை உருவானது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கொட்டகலை பிரதேச மக்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டதுடன், கேஸ் சிலிண்டர்களை வீதியில் வைத்து, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என உரத்துக் குரல் எழுப்பினர்.

அத்துடன், நுவரெலியா பகுதிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்ற லொறியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்தனர்.

இதனையடுத்து திம்புள்ள – பத்தனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, கேஸ் லொறியில் இருந்த கேஸ் சிலிண்டர்களில் 60 கேஸ் சிலிண்டர்களை மாத்திரம் இறக்கி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு வழங்கினர்.

சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் நுவரெலிய – ஹட்டன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேபோல் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த வாகன சாரதிகளும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.

DSC09180 DSC09197 DSC09232

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...