Sri Lanka Power Cuts Photo Gallery 2 1648879448845 1648879479785
இலங்கைசெய்திகள்

பொதுமக்கள் கேன்களில் எரிபொருளுக்கு அனுமதி!!

Share

பொதுமக்களின் பாவனைக்காக கேன்கள், போத்தல்கள் மற்றும் ஏனைய பாத்திரங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சில நேர்மையற்ற சக்திகள் இந்த சலுகையை துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளைப் பெற்று சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை அவதானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் வரிசையில் நிற்பவர்கள் இவ்வாறான செயற்பாடுகளால் சிரமங்களை எதிர்கொள்வதாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.

பொதுமக்களின் தேவைக்கு போதுமான எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்களுக்கு தேவையான அளவு ஜெர்ரி கேன்கள் மற்றும் பாட்டில்களில் மண்ணெண்ணெய் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...