coro
இந்தியாசெய்திகள்

கொரோனாவை ஒழித்த மகிழ்ச்சியில் மருத்துவர்கள்! – ஒரு நோயாளிகூட இல்லை

Share

உலகளாவிய ரீதியில் கட்டுக்கடங்காது பரவி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மிகப்பெரும் தொற்று கொரோனா.

உலகெங்கிலும் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. வீதிகள் தோறும் பிணங்கள் தேங்கிக்கிடந்தன.

இந்த கொரோனாத் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் மிகப்பெரும் தாண்டவமாடியது.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லாத நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றையதினமே கொரோனா நோயாளிகள் இல்லாத நாளாக அமைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நாள் மிக மகிழ்ச்சியான நாள். இந்த நிலையை எட்டுவதற்கு நாம் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. அனைவரதும் கடுமையான உழைப்பும் கூட்டு முயற்சியுமே இதற்கான மிகப்பெரும் காரணமாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கினோம். கொரோனா நோயாளிகள் ஒருபுறம், அவர்களது உறவினர்கள் ஒருபுறம். இந்த இரண்டு தரப்பினரையும் சமாளிக்க மிகப்பெரும் சிரமப்பட வேண்டி இருந்தது.

எமது கடின உழைப்புக்கும் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றியே இதுவாகும் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...