Gottabhaya
அரசியல்இலங்கைசெய்திகள்

இணக்கப்பாடின்றி முடிவடைந்த பேச்சு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சு இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சீர்செய்வதற்கு சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு, அவ்வாறு அமையும் அரசின் அமைச்சரவையில் ராஜபக்சக்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மேற்படி பிரதிநிதிகளை ஜனாதிபதி நேற்றிரவு அழைத்திருந்தார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பிரதானிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

சுமார் இரண்டு மணிநேரம்வரை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இடைக்கால அரசு அமைப்பது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...