மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் - வைத்தியர் ஆலோசனை
செய்திகள்இலங்கை

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

Share

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது மிக அவசியம் என சுகாதார துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் அதிகமாக கீரை வகைகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கொரோனாவுக்கென குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லாத நிலையில் மக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலை, மக்களின் உள ஆரோக்கியத்தை பாதிக்க கூடும் என்பதால், அனைவரும் மூன்று வேளை உணவுகளையும் தவறாது உண்ண வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான விட்டமின் சி  மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. நாளொன்றுக்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிட வேண்டும். புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அன்றாட வாழ்வில் பால், பழவகைகள், தானிய வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...

anura kumara
இலங்கை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த...

ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

  நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும்...