WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவின் அழைப்புக்கு வாலாட்டும் கூட்டம் நாங்கள் அல்லர் – ஜே.வி.பி சீற்றம்

Share

அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க,மேற்படி அறிவிப்பை கட்சியின் சார்பில் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அமைச்சர்களின் இராஜினாமா என்பது அரசியல் நாடகமாகும். இரவு 12 மணிக்கு பதவி துறந்தவர்கள் மறுநாள் பகல் 12 மணிக்கு மீண்டும் அமைச்சர்களாகின்றனர். இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

அதுமட்டுமல்ல பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க அமைச்சு பதவிகளை ஏற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமைச்சு பதவிக்கு போட்டி நிலவவில்லை என்பதை ஜனாதிபதி புரிந்து செயற்பட வேண்டும்.

கோட்டாவின் அரசில் வாலாட்டும் கூட்டங்கள் இருக்கலாம். அந்த கூட்டம் அமைச்சு பதவிக்கு கட்டுப்படலாம். நாம் அவ்வாறானவர்கள் அல்லர். எனவே, கோட்டாவின் அழைப்பை நிராகரிக்கின்றோம். கோட்டா அரசு பதவி விலக வேண்டும். அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara
இலங்கை

அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தல்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “2023ஆம் ஆண்டின் ஊழல்...

anura signature
இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் கையெழுத்திட்டால் மரண தண்டனையை நிறைவேற்றலாம்!

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்அவர்களுக்கு எதிராக...

AL Exam Bad Weather Grade 05 Scholarship examination
இலங்கை

பரீட்சை காலத்து இடர்களை அறிவிப்பதற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள தொலைபேசி இலக்கங்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக்...

Sri Pada 1
இலங்கை

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில்மண்மேடு சரிந்தது – காலநிலை சீரானதும் சீரமைப்பு பணிகள் இடம்பெறும்.

சிவனொளிபாத மலையின் உச்சியில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு...