76029f91 439d3e2f f1636930 basil
அரசியல்இலங்கைசெய்திகள்

பஸிலின் சம்மந்தி ‘றோ’ முக்கியஸ்தர்! – சர்ச்சையைக் கிளப்புகிறார் வீரவன்ச

Share

லிற்றோ நிறுவனத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முயற்சித்து வருகின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம், நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பஸில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது.

பஸில் ராஜபக்சவின் இரு மகள்களில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும்
திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில் திருமணம் முடித்துள்ள மகளின் மாமனார், ‘றோ’ உளவு அமைப்பின் பிரதானியாவார்.

இலங்கை கேட்கும்போதெல்லாம், கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவுக்கு இருக்காதா? அதனடிப்படையில், லிட்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு தயாராகி வருகின்றது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...