மின்தடை
இலங்கைசெய்திகள்

நாளை 13 மணி நேரம் மின்வெட்டு!

Share

நாட்டில் நாளை வியாழக்கிழமை 13 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள துஎன இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் இலங்கை மின்சார சபையால் இந்த மாதம் 5ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி நாளை A, B, C, D, E, F ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G, H, I, J, K, L ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

P, Q, R, S ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

T, U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை, காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளில் காலை 5.30 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...