மின்தடை
இலங்கைசெய்திகள்

நாளை 13 மணி நேரம் மின்வெட்டு!

Share

நாட்டில் நாளை வியாழக்கிழமை 13 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள துஎன இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் இலங்கை மின்சார சபையால் இந்த மாதம் 5ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி நாளை A, B, C, D, E, F ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

G, H, I, J, K, L ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

P, Q, R, S ஆகிய பிரிவுகளில் காலை 3 மணி முதல் 6 மணி வரை, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

T, U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 12 மணி முதல் 3 மணி வரை, காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

M, N, O, X, Y, Z ஆகிய பிரிவுகளில் காலை 5.30 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...