முகப்புத்தகக் காதலால்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முகப்புத்தகக் காதலால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்!

Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல்போன நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள், கிராமத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவந்துள்ளன.

அந்தச் சிறுமிகளில் ஒருவர் ‘பேஸ்புக்’ ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப் பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞர் சிறுமியை மட்டக்களப்புக்கு வருமாறு அழைத்துள்ளமையைத் தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டில் மாலைநேர கல்விக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சைக்கிளில் புறப்பட்டிருக்கின்றார்.

சைக்கிளைப் பற்றைக்காட்டுக்குள் விட்டு பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு இருவரும் சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞர் இருவரையும் காரில் ஏற்றிச் சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளமையைத் தொடர்ந்து, அவர்களை வீடு செல்ல அழைத்துக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டுள்ளார்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ். நகரப் பகுதியில் சுற்றித் திரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருள்களை வாங்கியபோது நள்ளிரவாகியுள்ளது.

இரண்டு சிறமிகளுக்கும் உதவி செய்வதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டு சென்று வீடு ஒன்றில் தங்கவைத்து, மற்றைய சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பஸ்ஸில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையைத் தொடர்ந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தைத் தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...