முகப்புத்தகக் காதலால்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முகப்புத்தகக் காதலால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்!

Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல்போன நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள், கிராமத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள்.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவந்துள்ளன.

அந்தச் சிறுமிகளில் ஒருவர் ‘பேஸ்புக்’ ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப் பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞர் சிறுமியை மட்டக்களப்புக்கு வருமாறு அழைத்துள்ளமையைத் தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டில் மாலைநேர கல்விக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சைக்கிளில் புறப்பட்டிருக்கின்றார்.

சைக்கிளைப் பற்றைக்காட்டுக்குள் விட்டு பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு இருவரும் சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞர் இருவரையும் காரில் ஏற்றிச் சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளமையைத் தொடர்ந்து, அவர்களை வீடு செல்ல அழைத்துக் கொண்டு வந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டுள்ளார்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ். நகரப் பகுதியில் சுற்றித் திரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருள்களை வாங்கியபோது நள்ளிரவாகியுள்ளது.

இரண்டு சிறமிகளுக்கும் உதவி செய்வதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டு சென்று வீடு ஒன்றில் தங்கவைத்து, மற்றைய சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பஸ்ஸில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையைத் தொடர்ந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தைத் தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...