Ceylon Petroleum Private Carrier Owners Association
செய்திகள்இலங்கை

மீண்டும் முடங்கியது எரிபொருள் விநியோகம்!

Share

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் விலகியுள்ளனர்.

இதனை இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் இன்று மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் 80% தனியார் தாங்கி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 60 வீதத்தால் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்கக்கோரி இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினரால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த கோரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மறுக்கப்பட்ட நிலையில், இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...