Ceylon Petroleum Private Carrier Owners Association
செய்திகள்இலங்கை

மீண்டும் முடங்கியது எரிபொருள் விநியோகம்!

Share

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் விலகியுள்ளனர்.

இதனை இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் இன்று மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் 80% தனியார் தாங்கி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 60 வீதத்தால் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்கக்கோரி இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினரால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த கோரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மறுக்கப்பட்ட நிலையில், இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...