நாட்டில் எரிபொருள், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகின்றது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்படி விவகாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை முன்வைக்கப்படும்.
#SriLankaNAwe
Leave a comment