செய்திகள்
யாழ். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
நாட்டில் பரவலாக எரிபொருள் தட்டப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுழற்சிமுறையில் எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் கூட்டம் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காணப்படுவதுடன், மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் அவதானிக்க முடிகிறது.
மக்கள் கூட்டத்தால் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login