செய்திகள்இலங்கை

சிமெந்து, பால்மா வரிகள் நீக்கம்!

Share

சிமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மொழி வினாவுக்கு பதிலளித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பால்மா, சிமெந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் விரைவில் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும்.

இதேவேளை விரைவில், பால்மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அரிசி, சீனி, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையும் உண்மையே. இருப்பினும் தற்போது நாட்டில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

எதிர்வதும் 7ம் திகதி ஹம்பாந்தோட்டையில் திறக்கப்படவுள்ள சிமெந்து தொழிற்சாலை மூலமாக மூன்று மில்லியன் சிமெந்து மூடைகள் மாதமொன்றுக்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும். அத்துடன் சிமெந்து இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை நீங்குவதற்கும், சிமெந்து வரியை நீக்குவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....