18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

Share

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் மிகக் குறைந்த பிறப்புகள் முல்லைத்தீவு பகுதியில் பதிவாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 301,706 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 220,761 ஆகவும் இருந்தது.

2021 ஆம் ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2022 இல் 275,321 ஆகவும், 2023 இல் 247,900 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, பதிவுகளின்படி, 2021 முதல் 2024 வரை இறப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன்படி, 2020 இல் இறப்புகளின் எண்ணிக்கை 132,371 ஆகவும், 2021 இல் 163,936 ஆகவும், 2022 இல் 179,792 ஆகவும், 2023 இல் 181,239 ஆகவும், 2024 இல் 171,194 ஆகவும் இருந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின்படி, 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 12,066 குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...