Parliament SL 2 1
செய்திகள்அரசியல்இலங்கை

விவாதத்துக்கு வருகிறது பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம்!

Share

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான புதிய சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனவே, இச்சட்டமூலம் வெகுவிரைவில் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஒரு சந்தேக நபரை தடுத்து வைக்கும் காலம் 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் பாதுகாப்பாக இருக்கின்றாரா? என்பதை உறுதி செய்வதற்காக மாஜிஸ்திரேட் நீதவான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வருகை தரவும் புதிய திருத்தச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சட்டத்தரணி ஒருவருக்கு வருகை தரவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் தமது உறவினர்களுடன் பேசுவதற்கும் புதிய திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்களின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...