Jagath Pushpakumara
செய்திகள்அரசியல்இலங்கை

பொது மனுக்கள் குழுவின் தலைவராக ஜகத் புஷ்பகுமார!

Share

பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தின் 122 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர்.

இதற்கமைய அமைச்சர்களான காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா, ஜானக வக்கும்புர, வியாழேந்திரன், தேனுக விதானகமகே, ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாகிர் மாகார், திலிப் வெதஆரச்சி, மனுஷ நாணயக்கார, கே.காதர் மஸ்தான், அசோக்க பிரியந்த, சிவஞானம் சிறீதரன், துஷார இந்துனில் அமரசேன, முஜிபுர் ரஹுமான், ரோஹினீ குமாரி விஜேரத்ன, வருண லியனகே, ஜகத் குமார சுமித்திராரச்சி, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, குலசிங்கம் திலீபன், நிபுண ரணவக, ராஜிகா விக்ரமசிங்ஹ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் இக்குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமரா வெல்கமவுக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்னவும், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.முஷாரப்புக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...