courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யானைக்கு தொல்லை கொடுத்தவருக்கு 2 லட்சம் அபராதம்!

Share

திருகோணமலை ஹபரண பிரதான வீதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை கெப் வாகனத்தால் விரட்டிச் சென்று யானைக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வாகன சாரதி குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து ஹபரண மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சமன் வெரணியகொட இரண்டு லட்ச ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ரசிக கிம்ஹான் தனஞ்சய ரூபசிங்க என்ற நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காட்டு விலங்குகளுக்கு தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை ஹபரண வீதியில் 2021 டிசம்பர் 25ஆம் திகதி சந்தேகநபர் இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த நபருக்கு எதிராக கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....