courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யானைக்கு தொல்லை கொடுத்தவருக்கு 2 லட்சம் அபராதம்!

Share

திருகோணமலை ஹபரண பிரதான வீதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை கெப் வாகனத்தால் விரட்டிச் சென்று யானைக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வாகன சாரதி குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து ஹபரண மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சமன் வெரணியகொட இரண்டு லட்ச ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ரசிக கிம்ஹான் தனஞ்சய ரூபசிங்க என்ற நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காட்டு விலங்குகளுக்கு தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை ஹபரண வீதியில் 2021 டிசம்பர் 25ஆம் திகதி சந்தேகநபர் இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த நபருக்கு எதிராக கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...