courts
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யானைக்கு தொல்லை கொடுத்தவருக்கு 2 லட்சம் அபராதம்!

Share

திருகோணமலை ஹபரண பிரதான வீதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை கெப் வாகனத்தால் விரட்டிச் சென்று யானைக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வாகன சாரதி குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து ஹபரண மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சமன் வெரணியகொட இரண்டு லட்ச ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ரசிக கிம்ஹான் தனஞ்சய ரூபசிங்க என்ற நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காட்டு விலங்குகளுக்கு தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை ஹபரண வீதியில் 2021 டிசம்பர் 25ஆம் திகதி சந்தேகநபர் இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த நபருக்கு எதிராக கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....